Pages

Friday, November 4, 2016

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!

தொலைத்து
விவரந்தெரியாத வயதில் தொடர்ச்சியாய் தேடி ..
வழி தெரியாது தவித்து
தெரிந்த வழியில் மோதி
பின்னர்
‘இனி வரும் ஜென்மத்தில் தான் ஒரு வேலை கிடைக்கும்’ என்ற  சமாதானத்துடன்
"தொலைஞ்சுதான் போச்சு" என்று சொல்லி
புதைந்துபோனதென் மனசு
…..
…………..
இடைப்பட்ட காலங்களில்...

ஏதேதோ திசைகள்
திக்கு தெரியாதும்
திக்கு தெரிந்தும்
எப்படி எப்படியோ பயணங்கள்
‘அழுகை’, ‘அவலம்’, ‘அவஸ்தை’
அப்பப்போஆனந்தம்’ என பல விதமாக கழிந்து போன காலங்கள்

10-ம் வகுப்பு கால
பணியும், பரிதவிப்பும்
பசுமையாய் நெஞ்சில் மலர்ந்த ஆரம்ப காலங்கள்

…வாழ்க்கையெனும் விசைத்தறியில் வலுவாய் இழுக்கப்பட்டு
மங்கிதான் போச்சு!

எத்தனையோ இரவுகள்
நெஞ்சில் சற்று சுகந்தம் பரப்ப
வலிய நினைவூட்டி - நினைவில் தொலைந்த இரவுகள்!
20 - கடந்த காலங்களிலும்
15-இல் பார்த்த தோற்றம் கொண்டே எப்போதேனும் மலரும் மர்ம கனவுகள் – -விட்டு செல்லும் விடியலில் - மீண்டும் பரிதவிப்பை

"என்னவோ?”
“எப்படியோ?”
எல்லாம் நலம் தானே?”
வேறேதாவது...?
என எப்படி, எப்படியோ

இன்று நிழற்பட தோற்றம் கண்டு…
25 வருட குழப்பம் தொலைக்கிறது மனசு
'வசந்தம்' கண்டு துளிர்க்கிறது
“நன்றி இறைவா! மிக்க நன்றி!!
“நல்லா வச்சுக்கோ!!”

“வேறென்ன சொல்ல?”

Tuesday, June 15, 2010

பிள்ளையார் சுழி

கவிதைகள் சிந்தித்து..

காலம் மறந்து...

கால் போன திசையில் நடந்து...

கரைந்து போன காலங்கள்

திரும்ப வருமா என்ற கனவோடு...

Monday, June 14, 2010

முதல் வணக்கம்

கவிதைகளா?

கிலோ எவ்வளவு என்று தான் கேட்டிருப்பேன்

18 வருடங்களுக்கு முன்பு

என் வாழ்க்கையில் நீ வராது போயிருந்தால்...

Sunday, June 13, 2010

நடை பயிற்ச்சி

***********************
என்னவள் குருடி!
எதிரே நானிருந்தால்...
***********************

கொளுத்தும் கத்திரி காலத்தில்
எனக்கு மட்டும் குளிர் சாதன வசதி!
....அருகே என்னவள்
***************************

Saturday, June 12, 2010

நினைவு ஸ்ருதி!

********************************************
இதை பதிவு செய்யாது போனால் குற்றவாளியாவேன்!
"என் இதய மாளிகையின் இரண்டாவது மாடியில் நீ!"
என்று உயிர் நண்பனின் பிறந்த நாளில்
நீ அருகில் இருக்க கவிதை சொன்னேன்.

முதல் மாடியில் யார்? என்று
நீ கேட்ப்பாயென்ற நப்பாசையோடு...

பொருளாக பரிசு தர இயலாத காலம் அது...
எனவே கவனம் திருப்ப குருதி ஆகியிருந்தது பேனா மையாக!

எல்லாம் படித்துவிட்டு சொன்னாய்....
"இரத்தம் சிகப்பு போதலை!"
***********************************************

Friday, June 11, 2010

நினைவு சிதறல்

..எத்தனையோ முறை
உன் மடி மீதும், தோள் மீதும்
அழுது கரைத்திருக்கிறேன்
என் சோகங்களை
......

இழப்புகள் குறித்தும்...,
தோல்விகள் குறித்தும்...
இன்னும் எதெற்கெதெற்க்காகவோ!
...........
இறுதியாக ஒரு முறை...
நீ எனக்கு இல்லாமல் போனது குறித்தும்!

Thursday, June 10, 2010

நினைவு சிதறல்

உன் 'கலகல' குரலோசையில்
கலக்கத் துடிக்கிறது என் மனம்
அருகே அமர்ந்து
ஆத்திச்சூடியேனும் சொல்லேன்!