********************************************
இதை பதிவு செய்யாது போனால் குற்றவாளியாவேன்!
"என் இதய மாளிகையின் இரண்டாவது மாடியில் நீ!"
என்று உயிர் நண்பனின் பிறந்த நாளில்
நீ அருகில் இருக்க கவிதை சொன்னேன்.
முதல் மாடியில் யார்? என்று
நீ கேட்ப்பாயென்ற நப்பாசையோடு...
பொருளாக பரிசு தர இயலாத காலம் அது...
எனவே கவனம் திருப்ப குருதி ஆகியிருந்தது பேனா மையாக!
எல்லாம் படித்துவிட்டு சொன்னாய்....
"இரத்தம் சிகப்பு போதலை!"
***********************************************
Saturday, June 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment