கவிதைகள் சிந்தித்து..
காலம் மறந்து...
கால் போன திசையில் நடந்து...
கரைந்து போன காலங்கள்
திரும்ப வருமா என்ற கனவோடு...
...சொந்த கவிதைகளை இணைய அரங்கிலேனும் அரங்கேற்றும் முயற்ச்சி!
கவிதைகள் சிந்தித்து..
காலம் மறந்து...
கால் போன திசையில் நடந்து...
கரைந்து போன காலங்கள்
திரும்ப வருமா என்ற கனவோடு...
கவிதைகளா?
கிலோ எவ்வளவு என்று தான் கேட்டிருப்பேன்
18 வருடங்களுக்கு முன்பு
என் வாழ்க்கையில் நீ வராது போயிருந்தால்...
ஆழ்ந்த இருள் போர்த்தி
அமிழ்ந்திருந்த காலங்களில்
'வெளிச்ச தண்ணீர்' தாகம் எடுத்து
வெகு தூரம் அலைந்திருக்கிறேன்...
வழி தெரியாது போய்
அருகிருந்த அசைவுகளை கேட்க
'கிழக்கு திசை பார்த்து காத்திருக்க சொல்லி'
குரல் ஒன்று சொன்னது!
வருடக் கணக்கில் காத்திருந்தும்
கீற்றாய் கூட ஒளியில்லை
கிழக்கு அடி வானில்!
திசை மாற்றி உதயம் வருமோவென்று
எண் திசை பார்த்து காத்திருந்தும்
எத்திசையும் உதிக்கவில்லை
என் மனச்சூரியன் -
"நான்" இறக்கும் நாள் வரை!
........................................
..........சென்ற வாரம் இறந்து போன
எதிர் வீட்டு ஜோசியன்
எதிர் படும் போது சொன்னான்
'என் மகன் தேடிக் கொண்டிருப்பதாகவும்,
அவன் மகன் தேட போவதாகவும்!'
***************
காதலில் திளைத்து
காமத்தில் கரைந்து
கடந்து போயிருக்கவேண்டும்!
உன்னை நானும்!
என்னை நீயும்!
உனக்கு நான் எப்படியோ
எனக்கு நீ உயிர் போகும் நேரம்
உறுத்தப் போகும்
நெஞ்சுக்குழி நினைவுகளென!
--------------------------------------------
ஒரே லயம்!
---------------------------------------------
உன்னை 'தொலைத்ததை' அறியாமல்
உன்னையல்லாத எல்லோரையும்
'தொலைத்தேன்'!
மற்ற எல்லோரையும்
தொலைத்த பின் தெரிகிறது
உண்மையில்
உன்னைத்தான்
'தொலைத்தேன்' என்று...