எனக்கு அவ்வப்போது
'பசிக்கிறது' என்றேன்.
'பசி' என்னைப் பொறுத்தவரை
நியாயமே என்றாலும்
காலம் கடந்த காரணத்தினால்
உன்னை பொறுத்தவரை
நியாயமேயில்லை!
எதை எதையோ பேசி
பின் இதை பேசி
பேசிய பின்
"பேசியது குற்றம்" என்று
காதோரம் கிசு கிசுக்கிறது
என் மனம்....
உணர்ந்ததை - உணர்த்தியதை
சொன்னேன்!
குற்றமாய் படவில்லை எனக்கு!
உணர்ந்திருந்தாலும்...
சத்தமாகவோ, சன்னமாகவோ
ஏதும் சொல்லிவிட முடியாது உனக்கு!
எனக்கு தெரியாதா என்ன?
நீ புத்த பிக்ஷினி இல்லையென்று!
'இதை' பேசியதனால்
உன் மனதில் நானும்
சராசரி பிராஜைகளில் ஒருவனாகி
நடந்து, கடந்து போவேனா
தெரியாதெனக்கு!
'பேசியது' தந்த குழப்பம் தீராது
உன் எல்லைகளுக்குள்
உன்னை பார்த்தபடி
உறங்கிப்போவேன் இன்றிரவு!
நாளை
ஒரு வேளை
'கிறுக்கு' தெளிந்திருக்கும் எனக்கு!
Wednesday, June 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment