நீயாக இல்லாத ஒருவரை 'யார்' என்று
தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.
கசப்பின் கசப்பை உண்டு
தெரிந்து கொண்டேன்
இனிப்பின் இனிப்பை!
இன்று உன்னை தெரிந்தாலும்
வருந்துகிறேன்...
நேற்று உன்னை இழந்ததை நினைத்து!
--------------------------------------------
ஒரே லயம்!
---------------------------------------------
உன்னை 'தொலைத்ததை' அறியாமல்
உன்னையல்லாத எல்லோரையும்
'தொலைத்தேன்'!
மற்ற எல்லோரையும்
தொலைத்த பின் தெரிகிறது
உண்மையில்
உன்னைத்தான்
'தொலைத்தேன்' என்று...
No comments:
Post a Comment