Pages

Monday, June 7, 2010

ஞானத் தேடல்.....


ஆழ்ந்த இருள் போர்த்தி
அமிழ்ந்திருந்த காலங்களில்
'வெளிச்ச தண்ணீர்' தாகம் எடுத்து
வெகு தூரம் அலைந்திருக்கிறேன்...

வழி தெரியாது போய்
அருகிருந்த அசைவுகளை கேட்க

'கிழக்கு திசை பார்த்து காத்திருக்க சொல்லி'
குரல் ஒன்று சொன்னது!

வருடக் கணக்கில் காத்திருந்தும்
கீற்றாய் கூட ஒளியில்லை
கிழக்கு அடி வானில்!

திசை மாற்றி உதயம் வருமோவென்று
எண் திசை பார்த்து காத்திருந்தும்
எத்திசையும் உதிக்கவில்லை
என் மனச்சூரியன் -
"நான்" இறக்கும் நாள் வரை!
........................................
..........சென்ற வாரம் இறந்து போன
எதிர் வீட்டு ஜோசியன்
எதிர் படும் போது சொன்னான்
'என் மகன் தேடிக் கொண்டிருப்பதாகவும்,
அவன் மகன் தேட போவதாகவும்!'
***************

No comments: