Pages

Thursday, June 3, 2010

'தொலைப்பு பத்திரம்'

நீ எனக்கு இல்லாது போனதை
அச்சடித்து சொன்ன ஒரு நாளில்...


இதயம் நடுங்க
'உன்னை தொலைத்துவிட்டேன்'!
என்று உறுக்கமாய் சொன்னேன்
யாரிடமும் பகிர்ந்திடாத
இரு பக்க கவிதை ஒன்றில்!


உனக்கும் கூட தெரியாது
அன்று உன்னை நான் 'தொலைத்தேன்' என்று...


வருடங்கள் பல உருண்டோடி
எதிர் பாராத ஓர் அலை பேசி தொடர்பில்
'குசலங்கள்' விசாரித்து...
'இடையோடிய காலம்' பேசி...
தயக்கமாய் சொன்னேன் 'தொலைத்ததை!'


எல்லாவற்றையும்
மௌனமாக கேட்டுவிட்டு
உறுதிப்படுத்திக் கொள்ளவோ,
உன்னை மையப்படுத்தி எழுதியது
என்று சேகரித்து வைத்து கொள்ளவோ,
கேட்க்கிறாய்....


ஏழு வருடங்கள் முன்பு
எழுதிய கவிதையை மட்டும்!

No comments: