Pages

Friday, May 14, 2010

உளியும்....சுத்தியும்.....!

எல்லோர் கையிலும்
எப்போதும் இருக்கிறது!



வீட்டில் இருப்போர் - இல்லாதோர்
தெருவில் போவோர் - வருவோர்....
எல்லோரிடமும்!
எப்போதும்!



எப்போதும்....
இக்கரங்கள்.....
செதுக்க ஏற்ற நேரம் பார்த்தபடி....



யார் யாரோ
செதுக்குகிறார்கள்!



வீட்டில், வெளியில்...
தெருவில், தேனீர் கடையில்....
எங்கெங்கோ....



ஐய்யோ....அலுவளகங்கள்....
எந்நேரமும் கேட்கலாம்
ஏதோ ஒரு மூலையில்
செதுக்கும் ஒளிகளை!



'நல்ல' மகன்
'திறமையான' உழைப்பாளி
'பொறுப்பான' கணவன்
என எப்படி எப்படியோ...



செதுக்கி செதுக்கி
நினைத்தது வராமல்
இன்னும் இன்னும் செதுக்கள்கள்....



நிஜ உருவை
உருக்குலைத்து
உயிர் குடித்த செதுக்கள்கள்!



செதுக்க பட்ட நானும்
செதுக்க பட்ட நீயும் சேர்க்கப்பட்டோம்.



விடிந்து பார்த்தால்
ஐய்யோ.....!
என் கையிலும் இருக்கிறது
உளியும்....! சுத்தியும்....!

No comments: