கூடிரண்டு
உள்ளிருக்கம் உண்மைகளால்
உரசிக்கொள்ள....
கூடியது
கூடோடு கூடியதொரு காலம்...
பின்னரெல்லாம்
தொடர்புகள்...
கூடுக்கும் கூடுக்கும் தான்
...எப்போதேனும்
விழி வழியே
உயிருக்கும் உயிருக்கும்....
கூடெடுத்ததன் காரணம் அறியாது...
கூடு கரைக்கும் மார்க்கம் உணராது...
கரைந்து போகிறது!
கூடோடு கூடிய இந்த காலம்...!
No comments:
Post a Comment