Pages

Sunday, May 2, 2010

கடந்து போகும் பேருந்தில்...

விடியும் வரை...
உன் நினைவில் திளைத்து,
விடிந்த பின்....
உன் கனவுகளில் உறங்கி,


உறங்கியவுடன் விழித்து...


அன்றாட அலுவல்களை
அரை குறையாய் - அவசரமாய்

நிறைவேற்றி,


சட்டையை திருப்பி அனிந்து,
திருப்பி அனிந்ததை திருத்தி அனிந்து,


இரு விள்ளல் இட்டிலி...
ஒரு கோப்பை குடிநீர்...


அவசரமாய் பேருந்து நிலையம்
ஓடோடி வந்து சேர்ந்தால்,
கடந்து போகும் பேருந்தில்
அரை மனதாய்
ஓர் இதழோர புன்னகையுடன் நீ!


இதற்காய் இத்தனை அல்லல்
என்ற என் மனம்
அடுத்த நொடி
ஆனந்த கூத்தாடி
ஆர்ப்பரித்து குதிக்கிறது
எனக்கென நீ ஈந்த
அந்த அரை மன புன்னகைக்கென!

No comments: