உடுப்புகள் அனிந்து
வெளியே போக தயாராக இருக்கிறேன்
என்று கண்டு கொள்கிறது
ஒன்றரை வயது பெண் குழந்தை!
என் அசைவுகளில்
கவனம் கொண்டிருந்து...
வெளி கிளம்பும் நேரம் பார்த்து
தத்தி தத்தி நடந்து வந்து
கட்டி பிடித்து கொள்கிறாள்
தன்னையும் கூட்டி செல்ல
சொல்லும் அடத்துடன்!
'வேற வேலையா போறேன்'
என்றதற்க்கு...
"னாநா...னாநா..." என்கிறாள்
'போகாதே எங்கேயும்' என்னும் விதமாய்!
பின்னர்
ஏதோ நினைத்து
அவள் ஆசை புரியாத எனக்கு
என் பணி நிமித்தங்கள் புரிந்தவள் போல்
"டாடா...டாடா..." என்கிறாள் ....சிரித்த முகமாய்!
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment