மழை வந்த நாளெல்லாம்
எனக்கு....
மழையில் நனைந்து
மழையாய் இருந்து பார்க்கும் ஆசை!
சிறு வயதிலேயே
என்னையும், மழையையும்
'சீக்கு வரும்' என்று சொல்லி
பிரித்து வைத்தார்கள்!
அன்று முதல்
மழையில் நனையும்
வெறும் கனவுகளில் கரைகிறது
என் மழைக்காலங்கள்!
என் நிலை இப்படி
பிறர் நிலை எப்படி?
என்று நெருங்கிய நண்பர்களை விசாரித்தால்....
ஒருவன்
போர்வையின் பயனை
அன்று தான் உணர்வேன் என்றும்,
மற்றொருவன்
மதுவின் பயன் அன்று தான் புரியும் என்றும்
இன்னும் பிற
மழையில்லா
ஆனால் மழைக்கால
செயல்கள்!
என்றேனும்
ஒரு நாள்
மழையில் நனைந்து...
மழையாய் இருந்து.....!
No comments:
Post a Comment