முதன் முதலாய்...
பெட்டிக்கடை தாத்தாவின்
மரணத்தில் அறிமுகமானது
அந்த பூ வாசம்.....
பின்னர்...
எதிர் வீட்டு
பூ விற்கும் பாட்டியின் மரணத்தில்...
பின் அந்த பூ வாசம்
வரும் போதெல்லாம்
எனக்கு எங்கோ
மரணம் நிகழ்ந்ததாய் எண்ணம்!
உண்மையில் மரணம் நிகழாத போதும்!!
ஊருக்கு அது சம்பங்கி
எனக்கு அது சாவு பூ!!!
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment