Pages

Tuesday, May 4, 2010

இமயங்களுக்கு அப்பால்....

பெண்ணே!
எனக்கு முன்னால் வரும்போது மட்டும்
நிர்வாணமாக வா!

நானும்
உனக்கு முன்னால் மட்டும்
நிர்வாணமாக வருவேன்!

நம்
நிர்வாணங்களுக்கு மட்டும்
பழக்கமும், பரிச்சயமும்
ஏற்படட்டும்!

முதன் முதலாக
நீ என்னை சந்திக்க வரும்
அந்த நாளில்....

...உன் இயல்பு நடையில் வா!
இந்த உலகம் உன்னை
பார்க்க உன்னில் நீ மாற்றி அமைத்த
நளினம் தொலைத்த நடை மறந்து...
உன் சொந்த நடையில் வா!

உன் குழந்தையின் குறுநடையை
காமம் கலக்காது
பார்க்க தெரியும்
என் கண்களுக்கு!

உன்னை ஊர் திரும்பி
பார்ப்பதற்க்காக
உன் விருப்பம் இல்லாது போயினும்...
உடுத்தும் உடை விடுத்து
உன்னை கவர்ந்த
உன்னை உறுத்தாத
உடையில் வா!

உன் உடையின் பின்னால்
இருக்கும் உன்னை
உணர தெரியும் எனக்கு!

வா!
உன் போலித்தனங்களை
மொத்தமாய் கொளுத்திவிட்டு,
உன் நிர்வாணத்தின்
பிறப்போடு வா!

நானும்
என் நிர்வாணத்தின்
பிறப்பெடுத்து
உனக்கென காத்திருப்பேன்!


நம் நிர்வாணங்கள்
சந்திக்கும் முதல் நாளில்...
என்னில் எஞ்சிய போலி தனங்கள்
ஏதேனும் கண்டால்....
களைந்தெரிய தயங்காதே பெண்ணே!

நானும் களையெடுக்க தயங்க மாட்டேன்!

வா!
நம் நிர்வாணத்தின் அஸ்த்திவாரத்தோடு
இமயங்களுக்கு அப்பால்
இனியதொரு உலகம் செய்வோம்!

இனி வரும்
பிறவியிலேனும்
இமயங்களுக்கு அப்பால்
இனிதாய் துவங்குவோம்!

No comments: