என் கவி திறமை வளர
நல் ஊக்கங்கள் அளித்த தோழி,
திடீரென ஒரு நாள்...
"நாளை என் பிறந்த நாள்" என்றாய்
"பரிசாக ஒரே ஒரு கவிதை" என்றாய்
எப்போதேனும் கவிதை முயலும் நான்
எப்படி ஒரு குறுகிய கால கவிதை சொல்வது
என்று குழம்பி தான் போனேன்!
பின் சொன்னேன்
பின் வருவனவற்றை...
'சிலரின் பிறந்த நாளுக்கென
சில காரணங்களுக்காக காத்திருப்பேன்
என் ஆக்க விதை ஒன்றிர்க்கு
ஊக்க நீரூற்றி ஊக்க நீரூற்றி
அவ்விதை விட்டு
விருட்சங்கள் வளர்வதை
என் கண்களாலேயே காண செய்த
உன் பிறந்த நாளுக்கெனவும்
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" சொல்ல
உற்றுக் கேள்
"நன்றி" எனும்
இத்தனை வார்த்தையும்!
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment