Pages

Thursday, May 13, 2010

ஒரு அலுவலக பிரிவு!

இது வரை...
கேலியும்...கிண்டலும்...
சிரிப்பும்...சந்தோஷமும் தான்
உனக்கும் - எனக்கும் இடையே!


எனக்கு முதியவளான உன்னிடம்
எதேனும் தீர்வு சொல்வாய், சொல்லாய்
என்ற சிந்தனைகள் இன்றி...

என் துக்கம், மகிழ்ச்சியை
பகிர்ந்திட நினைத்ததுண்டு!


வந்து போன நாளில்
வராமலே போய் விட்டது....
அப்படி ஒரு நாள்!


'நாளை பிரிவேன்' என்று
இன்று நீ சொல்வது
உறுத்துகிறது உள்ளத்தை!


என்ன சொல்வது
என்றரியாது சொல்கிறேன் - சொன்னவற்றை!


இத்தனையும் சொல்லிவிட
இன்று அவசியமில்லை தான்
எனினும்......


'நில்' என்றால்
நிற்கவா செய்கிறது
கனக்கும் நெஞ்சிருந்து
கசியும் வார்த்தைகள்!

No comments: