நடுநிசியில் மழை வந்து
ஓலைகளின் ஓட்டைகளில்
ஒழுகி ஒழுகி சொல்லும்
'ஓலையெல்லாம் ஓட்டை' என்று!
தூக்கம் கெட்டதில்
கோபம் வந்து
வீட்டு உரிமையாளரிடம்
கோபம் விழுங்கி விண்ணப்பிப்பேன்
'சீர்' செய்ய...
விண்ணப்பத்தின் விளைவாய்....
சீர் செய்ய வந்து செல்வர்
சீரில்லா சில பேர்.
போகும் போது
'இனி ஒழுகாது'
என்று உத்திரவாதம்
தந்து செல்வர்!
இனி காத்திருக்கோணும்...
அடுத்த மழை வந்து...
உண்மை சொல்லும் நாள் வரை!
Friday, May 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment