கற்பனை வெளி
மதிய நேர இள மழை....
புல்லின் வாசம் வீசும்
நம் மறைவான
சந்திப்பு தோட்டம்...
அருகே...
நல் குளிர் குளம்...
நீந்தி களிக்கும் நீர் பறவைகள்...
பூக்க துவங்கும் அல்லி...
பூவின் பின்னால்
ஒளியும் மீன் கூட்டம்...
...ஒரு வேளை....
அவற்றின் 'மறைவு தோட்டம்'?....
உன் வரவிற்க்கு
காத்திருந்த நான்...
என் சிந்தை ஈர்க்கும் விதம்
திருத்தமான ஆடை...
தீற்றாய் தின்னூறு...
ஒற்றை சன்ன சங்கலி...
காதோரம் ஊஞ்சலாடும் தோடு...
கரும்பழுப்பு கூந்தலில்....
மணக்கும் உன்னால்
மணக்கும் மலர்!
எனக்கான மலர்தலுடுன்
யவ்வனித்திருக்கும்
என்னுயிராகும் உன்னுயிர்...
கரம் பிடித்து...
காதோரம்...
நீ மயங்க...
உன் அழகு போற்றி...
நம்மை
எப்போதும் சுமக்கும்
நம் வசந்த மரத்தின்
அடியில் அமர்ந்து
பேசினோம்....
பல நேரம் பேசியவற்றை...
புத்தம் புதிதாய்....
பின்...
மாலை மயங்க மயங்க...
என் மார் சாய்ந்து கிறங்கி நீயும்
என் கண் மூடி உன்னை அணைத்து நானும்...
என்னுள்ளான உன்னில் நானும்
உன்னுள்ளான் என்னில் நீயும்...
கரைந்து போனோம்....
இதமான காற்றுடன்...
இருள் வந்து
நம்மை எழுப்பும் வரை!
நிஜம்....
சுட்டெரிக்கும்
சித்திரை சூரியன்!
சுழன்றடிக்கும் வெப்ப காற்று!!
கற்பனை வெளிகளில்
தூக்கி எறியப்பட்டு....
கை வீசி
கால் வீசி
பித்தம் பிடித்து
நடக்கும் மனம்!
Tuesday, May 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment