பீயங்காட்டு வழி பயணம்....
வெகு காலம் பயணித்திருக்கிறேன்....
...மல நாற்றம் தாங்க மாட்டாதும்
...பன்றிகள் தொந்தரவு பொறுக்க மாட்டாதும்
கொப்புளித்த கோவம் எல்லாம்
உடல் தன்மை கெடுத்தபடி!
பல வருடம் கழித்தே...
புரிந்திருக்கிறது!
என் பயணம் 'பீயங்காடு' வழியென்று!!
எப்போதும் பன்றிகளை
தீண்டியதாக நினைவில்லை எனக்கு.
எனினும் பன்றிகள் யாவற்றுக்கும்
மலம் உண்ணும் விழைவாய்
போவோர் வருவோரின்
ஆசனம் முகர்வதே பிழைப்பு!
முகர்ந்தது பன்றியின் ஆசனமே
என்பதை கண்டு கொண்டால்....
ஐய்யோ!
மகிழ்ந்து மலம் உண்பவர் கண்ட
மட்டற்ற மகிழ்ச்சியில்...
கூடி குலாவுகின்றன
....வாய்ப்பு கிடைத்த போதெல்லாம்
'இனத்தை' இனம் கண்ட மகிழ்ச்சியில்!
வகை வகையாய் பன்றிகள்....
இணை பன்றிகளை கவரும்
முயற்ச்சியில்
முதுகெலும்பில்லாத செயலில் ஈடுபடும்
அரை கிழவன் என்பதை மறந்த பன்றி!
அகங்காரத்தை
ஆதாரமாக்கி....
செத்த பழமை பீற்றி....
தன் ஆனவம்
செல்லுபடி ஆகும் இடம்
என்றரிந்து தெளிவாய்
தன் வினோத வீரத்தை
வெளிப்படுத்தும் பன்றி!
தன் மல நாடி முகரும் பன்றி
என்ற வாஞ்சையில்
செய்த குற்றம் யாவும்
குற்றம் செய்யாதான் பால்
சுலபமாய் சுமத்தும்
தலைப் பன்றி!
தலைப் பன்றி
தாலாட்டில் மயங்கி
காண்பதெல்லாம் மஞ்சலாய் காட்டும்
மஞ்ச காமாலை நோய் மகிழ்ந்து பெறும்
தன் தலை மறந்த பன்றி!
தான் என்ற கர்வம் களையாது
தன் அடி வருடிய
நபும்சக பன்றி என
அது போதிக்கும் பொய்களின் ஆதாரத்தில்
திசை தெரியாது
முட்டி மோதும்
முட்டாள் பன்றி!
சற்றே கவனம் செலுத்தி பார்த்தால்
பன்றிகள் யாவற்றுக்கும்
உணவாய்
உணர்வாய்
நினைவாய்
நிஜமாய்
கனவாய்
காலமாய்
எல்லாமுமாக எப்போதும் இருக்கிறது மலம்!
மலம் மாற்றி மலம் உண்பதே
இவைகளின் வாழ்வு சுருதி!
எவ்வளவு மலம் உண்ண முடிந்தது என்பதே
இவைகளின் திறமையின் வீச்சு!
பன்றிகளை பன்றிகள் என்றும்
பயணம் மலக்காடு வழியென்றும்
எனக்கு புரிந்ததை
புரிந்த நாள் முதல்
அடி படும் அச்சத்தில்....
அசிங்கப்படாதிருக்கும் அவசியத்தில்....
தன் உண்மை உணர்ந்திடாத போதும்
விலகி செல்கின்றன பன்றிகள்!
என் போல்
பீயங்காட்டு வழி பயணியர்
யாரேனும் இருப்பின்.....
அனுபவஸ்தன் வார்த்தைகள்....
முதலில் "பீயங்காடு" என்றறி!
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment